1பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோனவர்களுக்குள்ளே, சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கும் யூதாவிலுள்ள தங்கள் தங்கள் பட்டணங்களுக்கும்,
2செருபாபேல், யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களுடன் திரும்பிவந்த தேசத்து வம்சத்தாராகிய மக்களின் தொகையாவது:
3பாரோஷின் வம்சத்தார் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டுபேர்.
4செபத்தியாவின் வம்சத்தார் முந்நூற்று எழுபத்திரண்டுபேர்.
5ஆராகின் வம்சத்தார் எழுநூற்று எழுபத்தைந்துபேர்.
6யெசுவா யோவாப் என்பவர்களுடைய சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் வம்சத்தார் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டுபேர்.
7ஏலாமின் வம்சத்தார் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்துநான்குபேர்.
8சத்தூவின் வம்சத்தார் தொளாயிரத்து நாற்பத்தைந்துபேர்.
9சக்காயின் வம்சத்தார் எழுநூற்று அறுபதுபேர்.
10பானியின் வம்சத்தார் அறுநூற்று நாற்பத்திரண்டுபேர்.
11பெபாயின் வம்சத்தார் அறுநூற்று இருபத்துமூன்றுபேர்.
12அஸ்காதின் வம்சத்தார் ஆயிரத்து இருநூற்று இருபத்திரண்டுபேர்.
13அதொனிகாமின் வம்சத்தார் அறுநூற்று அறுபத்தாறுபேர்.
14பிக்வாயின் வம்சத்தார் இரண்டாயிரத்து ஐம்பத்தாறுபேர்.
15ஆதீனின் வம்சத்தார் நானூற்று ஐம்பத்துநான்குபேர்.
16எசேக்கியாவின் சந்ததியான அதேரின் வம்சத்தார் தொண்ணூற்றெட்டுப்பேர்.
17பேசாயின் வம்சத்தார் முந்நூற்று இருபத்துமூன்றுபேர்.
18யோராகின் வம்சத்தார் நூற்றுப் பன்னிரண்டுபேர்.
19ஆசூமின் வம்சத்தார் இருநூற்று இருபத்துமூன்றுபேர்.
20கிபாரின் வம்சத்தார் தொண்ணூற்றைந்துபேர்.
21பெத்லகேமின் வம்சத்தார் நூற்றிருபத்துமூன்றுபேர்.
22நெத்தோபாவின் மனிதர்கள் ஐம்பத்தாறுபேர்.
23ஆனதோத்தின் மனிதர்கள் நூற்றிருபத்தெட்டுபேர்.
24அஸ்மாவேத்தின் வம்சத்தார் நாற்பத்திரண்டுபேர்.
25கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் என்பவைகளின் வம்சத்தார் எழுநூற்று நாற்பத்துமூன்றுபேர்.
26ராமா, காபா என்பவைகளின் வம்சத்தார் அறுநூற்று இருபத்தொருபேர்.
27மிக்மாசின் மனிதர்கள் நூற்றிருபத்திரண்டுபேர்.
28பெத்தேல், ஆயி என்பவைகளின் மனிதர்கள் இருநூற்று இருபத்துமூன்றுபேர்.
29நேபோவின் வம்சத்தார் ஐம்பத்திரண்டுபேர்.
30மக்பீஷின் வம்சத்தார் நூற்றைம்பத்தாறுபேர்.
31மற்ற ஏலாமின் வம்சத்தார் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்குபேர்.
32ஆரீமின் வம்சத்தார் முந்நூற்றுஇருபதுபேர்.
33லோத், ஆதீத், ஓனோ என்பவைகளின் வம்சத்தார் எழுநூற்று இருபத்தைந்துபேர்.
34எரிகோவின் வம்சத்தார் முந்நூற்று நாற்பத்தைந்துபேர்.
35சேனாகின் வம்சத்தார் மூவாயிரத்து அறுநூற்று முப்பதுபேர்.
36ஆசாரியரானவர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் வம்சத்தார் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர்.
37இம்மேரின் வம்சத்தார் ஆயிரத்து ஐம்பத்திரண்டுபேர்.
38பஸ்கூரின் வம்சத்தார் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழுபேர்.
39ஆரீமின் வம்சத்தார் ஆயிரத்து பதினேழுபேர்.
40லேவியரானவர்கள்: ஒதாயாவின் சந்ததியான யெசுவா கத்மியேல் என்பவர்களின் வம்சத்தார் எழுபத்து நான்குபேர்.
41பாடகர்களானவர்கள்: ஆசாபின் வம்சத்தார் நூற்றிருபத்தெட்டுப்பேர்.
42வாசல் காவலாளர்களின் வம்சத்தாரானவர்கள்: சல்லூமின் வம்சத்தாரும், அதேரின் வம்சத்தாரும், தல்மோனின் வம்சத்தாரும், அக்கூபின் வம்சத்தாரும், அதிதாவின் வம்சத்தாரும், சோபாயின் வம்சத்தாருமானவர் எல்லோரும் நூற்றுமுப்பத்தொன்பதுபேர்.
43நிதனீமியரானவர்கள்: சீகாவின் வம்சத்தார், அசுபாவின் வம்சத்தார், தபாகோத்தின் வம்சத்தார்,
44கேரோசின் வம்சத்தார், சீயாகாவின் வம்சத்தார், பாதோனின் வம்சத்தார்,
45லெபானாகின் வம்சத்தார், அகாபாவின் வம்சத்தார், அக்கூபின் வம்சத்தார்,
46ஆகாபின் வம்சத்தார், சல்மாயின் வம்சத்தார், ஆனானின் வம்சத்தார்,
47கித்தேலின் வம்சத்தார், காகாரின் வம்சத்தார், ராயாகின் வம்சத்தார்,
48ரேத்சீனின் வம்சத்தார், நெகோதாவின் வம்சத்தார், காசாமின் வம்சத்தார்,
49ஊசாவின் வம்சத்தார், பாசெயாகின் வம்சத்தார், பேசாயின் வம்சத்தார்,
50அஸ்னாவின் வம்சத்தார், மெயூனீமின் வம்சத்தார், நெபுசீமின் வம்சத்தார்,
51பக்பூக்கின் வம்சத்தார், அகுபாவின் வம்சத்தார், அர்கூரின் வம்சத்தார்,
52பஸ்லூதின் வம்சத்தார், மெகிதாவின் வம்சத்தார், அர்ஷாவின் வம்சத்தார்,
53பர்கோசின் வம்சத்தார், சிசெராவின் வம்சத்தார், தாமாவின் வம்சத்தார்,
54நெத்சியாவின் வம்சத்தார், அதிபாவின் வம்சத்தாருமே.
55சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தாரானவர்கள்: சோதாயின் வம்சத்தார், சொபெரேத்தின் வம்சத்தார், பெருதாவின் வம்சத்தார்,
56யாலாகின் வம்சத்தார், தர்கோனின் வம்சத்தார், கித்தேலின் வம்சத்தார்,
57செபத்தியாவின் வம்சத்தார், அத்தீலின் வம்சத்தார், செபாயீமிலுள்ள பொகெரேத்தின் வம்சத்தார், ஆமியின் வம்சத்தாருமே.
58நிதனீமியரும் சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தார் எல்லோரும் முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.
59தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலுமிருந்து வந்து, தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வீகத்தையும் சொல்லமுடியாமல் இருந்தவர்கள்:
60தெலாயாவின் வம்சத்தார், தொபியாவின் வம்சத்தார், நெகோதாவின் வம்சத்தார், ஆக அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர்.
61ஆசாரியர்களின் மகன்களில் அபாயாவின் வம்சத்தார், கோசின் வம்சத்தார், கீலேயாத்தியனான பர்சிலாயின் மகள்களில் ஒருத்தியை திருமணம்செய்து, அவர்கள் வம்சப்பெயர் இடப்பட்ட பர்சிலாயின் வம்சத்தாரே.
62இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு விலக்கப்பட்டவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.
63ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்பும்வரை, இவர்கள் மகா பரிசுத்தமானதிலே சாப்பிடக்கூடாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.
64சபையார் எல்லோரும் ஏகத்திற்கு நாற்பத்திரண்டாயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள்.
65அவர்களைத்தவிர ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தேழுபேரான அவர்களுடைய வேலைக்காரர்களும் வேலைக்காரிகளும், இருநூறு பாடகர்களும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.
66அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு, அவர்களுடைய கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து,
67அவர்களுடைய ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து, கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது.
68வம்சங்களின் தலைவரில் சிலர் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திற்கு வந்தபோது, தேவனுடைய ஆலயத்தை அதன் ஸ்தானத்திலே எடுப்பிக்கும்படிக்கு, அதற்கான மன உற்சாகமாகக் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்.
69அவர்கள் தங்கள் சக்திக்குத்தக்கதாக திருப்பணிப் பொக்கிஷத்திற்கு அறுபத்தோராயிரம் தங்கக்காசுகளையும், ஐயாயிரம் இராத்தல் வெள்ளியையும், நூறு ஆசாரிய வஸ்திரங்களையும் கொடுத்தார்கள்.
70ஆசாரியர்களும், லேவியர்களும், மக்களில் சிலரும், பாடகர்களும், வாசல்காவலாளர்களும், நிதனீமியரும், தங்கள்தங்கள் பட்டணங்களிலும், இஸ்ரவேலர் எல்லோரும் தங்கள் தங்கள் பட்டணங்களிலும் குடியேறினார்கள்.